ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை வன்புணர்ந்த 10 வயது சிறுவன்!!

ஆசிரியர் - Editor II
ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை வன்புணர்ந்த 10 வயது சிறுவன்!!

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து குறித்த 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் அச்சிறுவன் அம்மாவட்டத்தின் சிறுவர் நீதிமன்றக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன், ஹசிறுவர் சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ள தகவல்களின்படி, சிறுமி தற்போது மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் என தெரிகிறது. சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் நடந்திருப்பதாகவும், வெளியே சென்ற சிறுமியின் தாய் தந்தை வீட்டுக்குள் திரும்பியபோது சிறுமி அழுது கொண்டிருந்ததாகவும், அவரிடம் விசாரிக்கையில் சிறுமியே குற்றச்சம்பவம் தொடர்பாக தகவல் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து பொலிஸார் சிறுவனிடம் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்ட போது சிறுவன், தனது கைபேசியில் ஆபாச படம் பார்த்ததையும், அதன்பின் சிறுமியிடம் அத்துமீறியதையும் ஒப்புக்கொண்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு