பிரதமருக்கு முன் மெளனமாக இருப்பவர்கள் அதிகாரிகளை பேசி பயன் என்ன?

ஆசிரியர் - Editor I
பிரதமருக்கு முன் மெளனமாக இருப்பவர்கள் அதிகாரிகளை பேசி பயன் என்ன?

யாழ்.மாவட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை. என பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் கேட்டால் பிரதமர் சிரிக்கிறார். என வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவரா சா கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே எதிர்கட்சி தலைவர் சி.தவரா சா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மே லும் அவர் கூறுகையில், 

எமக்கு கொடுக்க வேண்டியதை பிரதமர் தரவும் இல்லை அது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேட்கவும் இல்லை. 

கேட்க வேண்டியதை கேட்பவரிடம் கேட்காமலும் செய்ய வேண்டியதைச் செய்யாமலும் விட்டுவிட்டு அரச அதிகாரிகளை குறை கூறுவதும் அவர்களுடன் அரசியல்வாதிகள் முரண்படுவதும் ஏற்புடையதல்ல.

இந்த நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு அரசாங்கம் அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. 

இருந்தும் ஏனைய இனங்களுக்கு ஒதுக்குகின்றமை போன்றாவது யாழ்.மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருக்கிறதென்றால் அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் யாழிற்கு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

இங்கு தான் பல்வேறு தேவைகளும் மற்றும் பிரச்சனைகளும் காணப்படுகின்றன. ஆகவே அரசு நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்று அண்மையில் யாழ்.வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கொண்டிருந்தேன்.

அதற்கு அவரிடம் பதில் இல்லை. சிரிக்கின்றார். நாங்கள் அடிப்படை அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கின்ற போது பிரதமர் பொருளாதார அபிவிருத்தி பற்றி பேசுகிறார்.

இங்குள்ள எமது நிலைமையை கூறி தேவையைக் கோருகின்ற போது பிரதமரே பதில் கூறாமல் சிரிப்பாரானால் நாம் இதனை அமெரிக்க ஐனாதிபதி ரொனால்ட் ட்ரம்பிடமா அல்லது பிரிட்டிஸ் பிரதமரிடமா கோர முடியும்.

இதே போன்றே எமது பாராளுமன்ற  உறுப்பினர்களும் கேட்க வேண்டியவற்றைக் கேட்பவரிடம் கேட்காது இங்கு வந்து அது இது ஏன் என்ன என்று கேட்பதும் அதிகாரிகளைக் குறை கூறுவதும் அவர்களுடன் முரண்படபடுவதுமாக இருக்கின்றனர்.

ஆகவே மாவட்டத்திற்கு ஒதுக்க வேண்டியதை அரசாங்கம் ஒதுக்கித் தர வேண்டும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனூடாகவே சிறந்த்தொரு நிர்வாகத்தை கொண்டு சென்று மக்களது தேவைகள் பிரச்சனைகளத் தீர்த்து வைக்க முடியும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு