அரச வைத்தியசாலையில் அனுமதிக்க மறுப்பு!! -வீட்டில் இரட்டை குழந்தை பெற்ற தாயும் குழந்தைகளும் பரிதாப பலி-

ஆசிரியர் - Editor II
அரச வைத்தியசாலையில் அனுமதிக்க மறுப்பு!! -வீட்டில் இரட்டை குழந்தை பெற்ற தாயும் குழந்தைகளும் பரிதாப பலி-

கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசாங்க வைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 

பிரசவத்திற்கு பின்னர் அவருக்கு ஏற்பட்ட அதீத ரத்தப் போக்கால் பரிதாபமாக அவர் உயிரிழந்ததுடன், அவர் பெற்ற இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

கர்நாடகாவின் துமகூருபகுதியைச் சேர்ந்த 30 வயதான கஸ்தூரி என்பவர் கூலி வேலை குடிசைப் பகுதியில் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அயலவர்கள் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி, மாவட்ட அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு பணியில் இருந்த வைத்தியர் ஆதார் கார்டு மற்றும் பிரசவத்துக்கு பதிவு செய்ததற்கான துண்டு ஆகியவை இல்லை எனக் கூறி, அந்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்க மறுத்தார். 

இதனால் கஸ்தூரி மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். சிறிது நேரத்தில் வலி அதிகமானது. ஒரு குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது.

இதற்கிடையே அதிக ரத்தப் போக்கு காரணமாக கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் இறந்தன. இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, கஸ்தூரிக்கு வைத்தியசாலையில் அனுமதி மறுத்த வைத்தியரை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு