சாரதி தூங்கியதால் பேருந்து மீது மோதிய கார்!! -11 பேர் உடல் நசுங்கி பலி-

ஆசிரியர் - Editor II
சாரதி தூங்கியதால் பேருந்து மீது மோதிய கார்!! -11 பேர் உடல் நசுங்கி பலி-

சாரதி தூங்கியதால் பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. இக் கோர சம்பவத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு கார் ஒன்று பேருந்து மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

11 தொழிலாளர்கள் மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மீட்பு குழுவினரின் உதவியுடன் காரில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்தில் நசுங்கிய காரில் இருந்து மீதமுள்ள உடல்களை வெளியே எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக பெதுல் பொலிஸார் தெரிவித்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு