இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

ஆசிரியர் - Editor I
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 1ம் திகதி டுபாயிலிருந்து நாடு திரும்பிய 20 வயதான இளைஞர் ஒருவர் காய்ச்சல், தோலில் கொப்பளங்கள், வீங்கிய நிணநர் முனைகள் போன்ற அறிகுறிகளுடன், 

பாலியல் நோய் பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில், 

குறித்த நபரை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின்படி, குரங்கு அம்மைக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த நபர் தற்போது கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு