எங்கள் விவசாய காணிகளை பாதிரியார் ஒருவருக்கு தாரைவார்க்க நினைக்கிறார் அரச அதிபர்! விவசாயிகள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
எங்கள் விவசாய காணிகளை பாதிரியார் ஒருவருக்கு தாரைவார்க்க நினைக்கிறார் அரச அதிபர்! விவசாயிகள் போராட்டம்..

மாவட்டச் செயலர் எங்கள் விவசாய காணிகளை பாதிரியார் ஒருவருக்கு தரைவார்க்க முயற்சிக்கிறார். எனக்கூறி யாழ்.பருத்தித்துறை வீதியில் உள்ள வடமாகாண விவசாய அமைச்சின் முன்னால் போராட்டம் நடத்திய விவசாயிகள் கூறியுள்ளனர். 

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில் விவசாயம் செய்து வருகிறோம். 

இவ்வாறான நிலையில் குறித்த காணியை பாதிரியார் ஒருவர் தமக்குரிய காணி என எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் கூட்டத் தீர்மானம் எனக் கூறி அபகரிக்க முயல்கிறார். 

இந்த விடயம் தொடர்பில் அப்போதைய வடமாகாண ஆளுநராக இருந்த பி.எச்.எம்.சாள்சிடம் முறைப்பாடு செய்தோம் அதன் பயனாக குறித்த காணியில் ஒரு ஏக்கரை விவசாயம் செய்வதற்கு வழங்குவதோடு 

குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட விவசாயம் செய்ய ஆர்வமுள்ள குடும்பம் ஒன்றுக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குமாறு சிபாரிசு செய்தார். ஆனால் ஆளுநர் வழங்கிய பணிபுரையை அரச அதிபர் நடைமுறைப்படுத்தாது புறந்தள்ளி வருகிறார்.

குறித்த காணி சுமார் 70 ஏக்கர் வரை காணப்படுகின்ற நிலையில் சுமார் 58 ஏக்கர் வரை சுமார் 40குடும்பங்களுக்கு மேல் விவசாயம் செய்து வருகிறோம்.

காணிப் பிணக்குகளை தீர்ப்பதாக எம்மை அழைத்த மன்னார் அரச அதிபர் குறித்த காணிக்கு உரிமை கொண்டாடும் பாதிரியாரையும் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தார்.

குறித்த கூட்டத்தில் நாம் விவசாயம் செய்து வரும் காணியை ஒரு குடும்பத்துக்கு இரண்டு ஏக்கர் வீதம் பகிந்த தாருங்கள் அல்லது ஆளுநர் வழங்கிய பணிபுரையை நிறைவேற்றுங்கள் எனக் கூறினோம் அவர் அவ்வாறு செய்யவில்லை. 

எமக்கு முன்னால் இவர்களுக்கு இரண்டு ஏக்கர் கொடுப்போமா? என பாரியாரிடம் மாவட்டச் செயலர் கேட்டார். அதற்கு பாதிரியார் மறுக்க அவர் அவ்வாறு செய்ய முடியாது என மாவட்டச் செயலர் எங்களுக்கு கூறினார்.

மாவட்ட அரசாங்க அதிபரும் பாதிரியாரும் நெருங்கிய உறவினர்களாக காணப்படும் நிலையில் நாம் காலாகாலமாக விவசாய செய்து வந்த காணிகளை பறித்து பாதிரியாருக்கு வழங்க பார்க்கிறார் என்ற சந்தேகம் எழுகிறது.

நானும் கிறிஸ்தவனாக காணப்படுகின்ற நிலையில் ஆசியாவிலேயே செல்வம் கொழிக்கும் தேவாலயமாக மடு தேவாலயம் காணப்படுகிறது. மடு தேவாலயத்திற்கு சொந்தமாக 300க்கும் மேற்பட்ட வீடுகளும் காணிகளும் உள்ள நிலையில் 

வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்யும் காணியை தமக்குத் தர வேண்டும் என கேட்பது நியாயம் அல்ல. 

நாங்களும் மடு ஆலயத்துக்கு செல்கிறோம் காணிக்கை வழங்குகிறோம் நாங்கள் நல்லா இருந்தால் இறைவனுக்கு இன்னும் அள்ளிக் கொடுப்போம். 

இறைவனின் பெயரைப் பயன்படுத்தி எமது வாழ்வாதாரக்காணியை கேட்பதை வழங்க முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் விவசாயம் செய்யும் பத்து பேருக்கே காணிகள் இல்லை 

 நாம் 27 பேருக்கு ஒரு ஏக்கர் வீதம் வழங்குவதற்கு சம்மதம் கேட்ட நிலையில் அவர்கள் சம்மதிக்கவில்லை என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு