திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! -அச்சத்தில் மக்கள்-

ஆசிரியர் - Editor II
திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! -அச்சத்தில் மக்கள்-

கேரள மாநிலம் - கோழிக்கோடு பகுதியில் கடல் நீர் திடீரென 50 மீற்றர் உள்வாங்கிய சம்பவம் அம்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை. இங்கு பலரும் சுற்றுலாவாக வந்து செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று மாலை இந்த கடற்கரைக்கு வந்தவர்கள், கடல் நீர் உள் வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 50 மீற்றருக்கு கடல் நீர் உள் வாங்கி இருந்தது.

இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பீதியடைந்தனர். ஆனால் இதனை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மறுத்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. எனவே கடல் நீர் உள்வாங்கியது குறித்து கவலைப்படத் தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு