புறப்பட்ட தனியார் விமானத்தின் இயந்திரம் திடீரென தீப்பிடித்தது!! -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்-

ஆசிரியர் - Editor II
புறப்பட்ட தனியார் விமானத்தின் இயந்திரம் திடீரென தீப்பிடித்தது!! -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்-

பெங்களூருக்கு புறப்பட்ட தனியார் விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இருப்பினும் குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியயுள்ளர். 

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு தனியார் விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 184 பயணிகளும், ஊழியர்களும் ஏறிய பின்பு விமானம் பறக்க தொடங்கியது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. அதோடு இயந்திரமும் தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் விமானத்தை மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே சாமர்த்தியமாக தரை இறக்கினார். அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு