கோவை கார் வெடிப்பு சம்பவம்!! -என்.ஐ.ஏ விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரை-

ஆசிரியர் - Editor II
கோவை கார் வெடிப்பு சம்பவம்!! -என்.ஐ.ஏ விசாரிக்க ஸ்டாலின் பரிந்துரை-

கோவை உக்கடத்தில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், குறித்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். கோவையில் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் பொலிஸாருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

மேலுமு; கோவை கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிதாக பொலிஸ் நிலையங்கைள அமைக்கவும் அவர் மேலும் உத்தரவிட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு