5 வருட காதலுக்கு முற்றுப்புள்ளி!! -ஏமாற்றியாதால் காதலியை 18 இடத்தில் வெட்டிக் கொலை செய்த இளைஞர்-

ஆசிரியர் - Editor II
5 வருட காதலுக்கு முற்றுப்புள்ளி!! -ஏமாற்றியாதால் காதலியை 18 இடத்தில் வெட்டிக் கொலை செய்த இளைஞர்-

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச்; சேர்ந்த தனியார் மருத்துவமனையில் மருந்தாரான விஷ்ணு பிரியா (வயது 23) என்பவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திய போது உயிரிழந் பெண்ணின் வீட்டில் இருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் கூறினர்.

இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் கைபேசியை பொலிஸார் சோதணை செய்துள்ளனர்.  இதில் கூத்துபரம்பு மானந்தேரி பகுதியை சேர்ந்த சியாம்ஜித் (வயது 23) என்பவரின் தொலைபேசி இலக்கும் இருந்துள்ளது. இதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்தனர். இதன் போது விஷ்ணு பிரியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 5 வருடங்களாக விஷ்ணு பிரியாவும், சியாம்ஜித்தும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும் விஷ்ணு பிரியாவுக்கு பொன்னானி பகுதியைச் சேர்ந்த வேறொரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரியவந்ததால் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. 

இதன் பின் சியாம்ஜித்துடன் பேசுவதை விஷ்ணு பிரியா நிறுத்தினார். இதன் காரணமாக இவர் மீதும், அவருடன் நெருக்கமாக இருக்கும் பொன்னானி இளைஞர் மீதும் ஷியாம் ஜித்துக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலில் விஷ்ணு பிரியாவையும், பின் அந்த வாலிபரையும் கொல்ல தீர்மானித்தார். இதற்காக ஒரு கத்தியையும், சுத்தியலையும் வாங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் காலை விஷ்ணு பிரியாவின் வீட்டுக்கு சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லை. இந்த சமயத்தில் விஷ்ணு பிரியா பொன்னானி இளைஞருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். சியாம்ஜித்தை பார்த்ததும் விஷ்ணு பிரியா அலறியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் சுத்தியலால் அவரது தலையில் பலமாக அடித்து பின்னர் சரமாரியாக வெட்டி உள்ளார். கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதன் பின் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், வழக்கம் போல் தந்தையின் கடையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

விஷ்ணு பிரியாவை கொலை செய்த பின்னர் அவர் சிக்கி இருக்காவிட்டால் பொன்னானி இளைஞரையும் சியாம்ஜித் கொலை செய்திருப்பார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே விஷ்ணு பிரியாவின் உடல் கண்ணூர் அரச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது உடலில் பலமான 18 காயங்கள் இருந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர் விஷ்ணு பிரியாவின் உடல் அவரது வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் பொலிஸார் சியாம்ஜித்தை தலச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு