யாழ்.மாதகலில் இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிரடி! பெருமளவு போதைப் பொருள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிரடி! பெருமளவு போதைப் பொருள் மீட்பு..

யாழ்.மாதகல் பகுதியல் இன்று அதிகாலை இராணுவ புலனாய்வு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சுமார் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று(23) அதிகாலை 2 மணியளவில் மாதகல் கடற்கரையோரமாக குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கேரள கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் படகு என்பன இளவாலை பொலிஸாரிடம் 

ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு