நோயாளர்காவு வண்டி விபத்து!! -பிரசவத்திற்குச் சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட இருவர் பலி-

ஆசிரியர் - Editor II
நோயாளர்காவு வண்டி விபத்து!! -பிரசவத்திற்குச் சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட இருவர் பலி-

சிவகங்கை மாவட்டம் 20 வயதான கர்ப்பிணி ஒருவருக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து நோயாளர்காவு வண்டியில் அரசு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

உடன் அவரது அம்மா விஜயலட்சுமி மற்றும் உறவுப் பெண் திருச்செல்வி ஆகியோர்கள் சென்றனர். ஊத்திக்குளம் அருகே சென்ற போது, மரத்தில் மோதி நோயாளர்காவு வண்டி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். நோயாளர்காவு வண்டி சாரதி மலையரசன் (வயது 27), தொழில்நுட்ப அலுவலர் சத்யா (வயது 30) மற்றும் உறவுப்பெண் திருச்செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு