லொரி மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து!! -6 பேர் பலி: 15 பேர் படுகாயம்-

ஆசிரியர் - Editor II
லொரி மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து!! -6 பேர் பலி: 15 பேர் படுகாயம்-

குஜராத்தில் லொரி மீது சொகுசு பேருந்து மோதியதால் நடந்த கோர விபத்துச் சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குஜராத்தில் வதோதராவின் கபுராய் பாலம் தேசிய நெடுஞ்சாலையில் டிரெய்லர் லொரி மீது எதிர்பாராதவிதமாக சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்,மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுசிகிச்சைக்காக வதோதராவின் எஸ்.எஸ்.ஜி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு