பெற்றோல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது!!! இன்று இரவு 9 மணி தொடக்கம் புதிய விலை அமுலில்..

ஆசிரியர் - Editor I
பெற்றோல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது!!! இன்று இரவு 9 மணி தொடக்கம் புதிய விலை அமுலில்..

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருக்கின்றது. 

விலை குறைப்பு இன்று திங்கட்கிழமை (17) இரவு 9 மணி முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதன்படி, 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவாலும் ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 370 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 415 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும். 

எவ்வாறிருப்பினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

அதற்கமைய ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் என்பவற்றின் விலை 510 ரூபாவாகக் காணப்படுகிறது.

மேலும் மண்ணெண்ணெய்யின் விலை 340 ரூபாவாகவும் , தொழிற்சாலை மண்ணெண்ணெய் விலை 464 ரூபாவாகவும் காணப்படுவதாக 

பெற்றோலிய கூட்டுத்தானம் மேலும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு