கடன் கொடுக்காவிட்டால் வங்கியை குண்டு வைத்து தகர்ப்பேன்!! -வங்கிக்கு வந்த கடன் விண்ணப்பம்-

ஆசிரியர் - Editor II
கடன் கொடுக்காவிட்டால் வங்கியை குண்டு வைத்து தகர்ப்பேன்!! -வங்கிக்கு வந்த கடன் விண்ணப்பம்-

மும்பையில் உள்ள எஸ.;பி.ஐ வங்கிக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு 10 இலட்சம் ரூபா கடன் கொடுக்காவிட்டால் வங்கியை குண்டு வைத்து தகர்ப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

மேலும் கடன் தராவிட்டால் வங்கி மேலாளரைக் கடத்திக் கொலை செய்து விடுவதாகவும் அந்த மர்ம நபர் எச்சரிக்கை செய்துள்ளார். 

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில், தொலைபேசியில் அழைத்தவர் மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை பொலிஸார் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர். வங்கிக்கு ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு