மருமகள் உடல்நலம்பெற வேண்டி தீக்குளித் பாசக்கார மாமியார்!!

ஆசிரியர் - Editor II
மருமகள் உடல்நலம்பெற வேண்டி தீக்குளித் பாசக்கார மாமியார்!!

மருமகள் உடல் நலம்பெற வேண்டும் என்று வேண்டி மாமியார் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் ஒன்று தென்காசி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

குறித்த மாவட்டம் கடையம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை வடக்குத் தெருவை சேர்ந்த மணிமுத்துவின் மனைவி அன்னம் (வயது 88) என்பவர்களுக்கு கண்ணன் (55) என்னும் மகன் உள்ளார்.  அன்னம் தனது சகோதரர் மகளான கவிதா என்பவரை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது சொந்த அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வந்ததால் கவிதா மீது அன்னம் பாசமாக இருந்து வந்துள்ளார். அண்மைக்காலமாக கவிதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அன்னம் மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அன்னத்தின் கனவில் அவர் இறந்தால் உனது மருமகள் உடல் நலம் சீராகும் என அசரீரி தோன்றியதாக தனது மகன் கண்ணனிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்னம் நேற்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு