பெண்களை நிர்வாணமாக்கி நரபலி!! -உடலை 56 துண்டுகளாக வெட்டிய கொடூர மந்திரவாதி-

ஆசிரியர் - Editor II
பெண்களை நிர்வாணமாக்கி நரபலி!! -உடலை 56 துண்டுகளாக வெட்டிய கொடூர மந்திரவாதி-

கேரளாவில் கடவுளின் தேசம் என் கூறப்பட்டு இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரோஸ்லின் (வயது 50) என்பவர் அதிஸ்டலாப சீட்டு விற்று வந்தார். கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. 

இது குறித்து உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் ரோஸ்லினை தேடி வந்தனர்.

இதுபோல தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணும் கேரளாவில் தங்கி இருந்து அதிஸ்டலாப சீட்டு விற்று வந்தார். அவரும் கடந்த மாதம் திடீரென மாயமானார். அது குறித்தும் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் அவரை தேடி வந்தனர். 

இதன்படி பத்மாவின் கைபேசி எண்ணை வைத்துக் கொண்டு அவர் இறுதியாக இருந்த திருவல்லா என்னும் பகுதிச்சு சென்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். இதில் பத்மாவை முகமது ஷபி என்ற நபர் அழைத்து செல்வது பதிவாகி இருந்தது.

பொலிஸார் முகமது ஷபியை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்தான் பத்மாவை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதில் பத்மா கொலை செய்யப்பட்டதும், அவரது உடலை திருவல்லாவில் உள்ள பகவந்த் என்ற வைத்தியர் வீட்டின் பின்பகுதியில் புதைத்திருப்பதாகவும் கூறினார்.

பொலிஸார் அங்கு சென்று பத்மாவின் உடலை தோண்டி எடுத்தனர். அந்த உடல் அருகே இன்னொரு உடலும் புதைக்கப்பட்டிருந்தது. அந்த உடல் யாருடையது என விசாரித்தபோது அது எர்ணாகுளத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமான ரோஸ்லின் உடல் என தெரியவந்தது.

ரோஸ்லின், பத்மா இருவரையும் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதானவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் சித்த வைத்திய தொழில் செய்து வந்த பகவந்த்துக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவர் செல்வம் பெருக என்ன செய்யலாம் என நண்பரும், மந்திரவாதியுமான முகமது ஷபியிடம் ஆலோசனை கேட்டார்.

அவர் பெண்களை நரபலி கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என கூறினார். இதற்கான பெண்ணை தானே ஏற்பாடு செய்வதாகவும் முகமது ஷபி கூறினார்.

இதையடுத்து முகமது ஷபி, எர்ணாகுளத்தில் இருந்து ரோஸ்லினை திருவல்லா அழைத்து வந்தார். பண ஆசை காட்டியும், சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறி அழைத்து வந்த அவரை பகவந்த் வீட்டில் வைத்து நரபலி கொடுத்துள்ளனர்.

முதலில் அவரை நிர்வாணமாக படுக்க வைத்து பின்னர் அவரது தலையில் சுத்தியலால் அடித்தும், மார்பகத்தை அறுத்தும் உள்ளனர். அவர் இறந்த பின்பு உடலை 56 துண்டுகளாக வெட்டி வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

அதன்பின்பு தர்மபுரி பத்மாவையும் இதே போல அழைத்து வந்து அவரையும் 5 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்துள்ளனர். இந்த கொலைக்கு பகவந்தின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு