வாடகைத்தாய் மூலம் குழந்தை விவகாரம்!! -நயன்-விக்னேஷ் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சர் தகவல்-

ஆசிரியர் - Editor II
வாடகைத்தாய் மூலம் குழந்தை விவகாரம்!! -நயன்-விக்னேஷ் மீது நடவடிக்கை: சுகாதார அமைச்சர் தகவல்-

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நயன் - விக்னேஷ் தம்பதியினர் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி கேள்வி எழுப்ப செய்துள்ளது. 

இந்நிலையில் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து பேசியுள்ளார். 

அதில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு