குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளங் குழந்தை!! -பிறந்து சில மணி நேரத்தில் வீசப்பட்ட அவலம்-

ஆசிரியர் - Editor II
குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளங் குழந்தை!! -பிறந்து சில மணி நேரத்தில் வீசப்பட்ட அவலம்-

இந்தியாவின் சேலம் மாநகர் பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற அவல சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இன்று திங்கட்கிழமை காலை வழமை போன்று குப்பை அள்ள வந்த மாநகராட்சி பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் அன்னதானப்பட்டி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பிறந்து சில மணி நேரங்களை ஆன பச்சிளம் குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் ஆணா, பெண்ணா என்பது அடையாளம் தெரியாமல் உள்ளது. மேலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் வீடு வீடாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு