அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் சடலமாக மீட்பு!!

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் சடலமாக மீட்பு!!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட, 8 மாத குழந்தை உட்பட 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி பொலிஸார் இன்று வியாழக்கிழமை சடலமாக மீட்டனர்.

அந்நாட்டின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (வயது 36), மனைவி ஜஸ்லீன் கவுர் (வயது 27), இவர்களின் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமன்தீப் சிங் (வயது 39) என்பவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். நெடுஞ்சாலையில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகே, அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.

அவர்களிடம் ஆயுதம் உள்ளதாகவும், ஆபத்தானவர்கள் எனவும் கூறிய பொலிஸார், விசாரணை நடந்து வருவதால், மேற்கொண்டு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கடத்தலுக்கான காரணம் மற்றும் நோக்கம் ஆகியவை பற்றி கூறாத பொலிஸார் குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் அவர்களை அணுகாமல் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு