யாழ். நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும்

ஆசிரியர் - Admin
யாழ். நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தலும் கலந்துரையாடலும்

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ். பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் கலந்துரையாடலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (01) பிற்பகல்-05.45 மணி முதல் யாழ் பொதுநூலக முன்றலில் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் ஸ்ரீலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும்.

எனவே, யாழ்.நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்விலும் கலந்துரையாடலிலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கேட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு