43 முறை ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டம் இழப்பு!! -மோசமான சாதனை படைத்த ரோகித்-

ஆசிரியர் - Editor II
43 முறை ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டம் இழப்பு!! -மோசமான சாதனை படைத்த ரோகித்-

43 முறை ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட்டம் இழந்து மோசமான சாதணை ஒன்றை இந்தியா அணியின் தலைவர் ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார். 

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா ரபாடா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஒரு மோசமான சதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அதாவது சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா 43 முறை ஆட்டம் இழந்து முதல் இடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்த படியாக அயர்லாந்தின் கெவின் ஓ பிரெய்ன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.

சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்த நபர்களின் வரிசையில் ரோகித் சர்மா - 43 முறை, கெவின் ஓ பிரெய்ன் - 42 முறை, முஷ்பிகுர் ரஹீம் - 40 முறை, முகமது நபி - 39 முறை, ஷாகித் அப்ரிடி - 37 முறை ஆட்டமிழந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு