மீண்டும் மகனுடன் இணையும் சிரஞ்சீவி!!

ஆசிரியர் - Editor II
மீண்டும் மகனுடன் இணையும் சிரஞ்சீவி!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த 'ஆச்சார்யா' படம் படுதோல்வி அடைந்து. இந்நிலையில் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இதனை சிரஞ்சீவி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-'ஆச்சாரியா' படத்தின் தோல்வி என்னை பாதிக்கவில்லை, ராம் சரணையும் இது பாதிக்காது. ஏனெனில் இயக்குனர் சொன்னபடி படத்தில் நடித்து முடித்தோம். 

ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை அங்கீகரிக்கவில்லை. இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டோம் என்று அர்த்தம் ஆகி விடாது. வாய்ப்பு வந்தால், காலம் கனிந்தால் மீண்டும் இணைந்து நடிப்போம். இவ்வாறு சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு