ரசிகர்களால் சூழ்ந்ததால் மிரண்டு போன கரீனா கபூர்!!

ஆசிரியர் - Editor II
ரசிகர்களால் சூழ்ந்ததால் மிரண்டு போன கரீனா கபூர்!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய நடிகை கரீனா கபூரை ரசிகர்கள் பலர் செல்பி எடுப்பதற்காக சூழ்ந்துள்ளனர். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்த ரசிகர்கள் பலர் அவரை தள்ளவும் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நடிகையின் பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் கரீனா கபூர் விமான நிலையத்திற்கு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு