வீதியில் வைத்து மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கிய கணவன் கைது! வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..

ஆசிரியர் - Editor I
வீதியில் வைத்து மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கிய கணவன் கைது! வேடிக்கை பார்த்த பொதுமக்கள்..

வீதியில் வைத்து மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கிய கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் திருகோணமலை - மூதுார் கிளிவெட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் பொதுமகன் ஒருவரினால் வெளியிடப்பட்ட நிலையில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணின் கணவன் அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத முற்பட்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்றபோது பெருமளவிலான மக்கள் அங்கு இருந்த போதிலும், அவளை காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு