அரச ஊழியர்கள் தொடர்பில் மற்றொரு விசேட சுற்றறிக்கை வெளியானது..!

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்கள் தொடர்பில் மற்றொரு விசேட சுற்றறிக்கை வெளியானது..!

பொதுச் சேவையின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக ஆண் - பெண் அரச ஊழியர்கள் அனைவரும் பொருத்தமான மற்றும் அடக்கமான உடைகளை அனுமதிக்கும் அரச அதிகாரிகளின் உடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே நேற்று இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். சுற்றறிக்கையின்படி ஆண்கள் நீள் கால்சட்டை மற்றும் சட்டை அல்லது தேசிய உடையை அணிய வேண்டும்.

அதே நேரத்தில் பெண்கள் புடவைகள். கண்டியன் (ஓசாரி) அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணிந்து. பொது சேவையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும்.

இதேவேளை நாடாளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச விழாக்கள் அல்லது மாநாடுகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்குள் அரச அதிகாரிகள் தேசிய உடை அல்லது பரிந்துரைக்கப்பட்ட உடையை அணிந்திருக்க வேண்டும். 

என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு