இலங்கையை உலுக்கிய பாரிய தீ விபத்து, 50ற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசம்! முப்படைகள், மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு..

ஆசிரியர் - Editor I
இலங்கையை உலுக்கிய பாரிய தீ விபத்து, 50ற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசம்! முப்படைகள், மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு..

கொழும்பு - பாலத்துரை - கஜீமாவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியருப்பு பகுதியில் ஏற்பட்டிருந்த பாரிய தீ விபத்தினால் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜப்பானில் இருந்து உத்தரவு வழங்கியுள்ளார். 

தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்துகொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், தீயணைக்குப் பிரிவினர், சுகாதார அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசாங்கத் தரப்பினரையும் தொடர்புகொண்டு, 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை நேற்றிரவு முதலே பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளார்.

நேற்று (27) இரவு 8 மணியளவில் தொட்டலங்க காஜிமா வத்த பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. எவ்வாறாயினும், இதுவரை உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு