யாழ்.பிறவுண் வீதியில் மதுபானம் அருந்தியதுடன், மாவா பாக்குடன் கோவில் கேணியில் இருந்த 4 மாணவர்களுக்கு நடந்த தரமான சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பிறவுண் வீதியில் மதுபானம் அருந்தியதுடன், மாவா பாக்குடன் கோவில் கேணியில் இருந்த 4 மாணவர்களுக்கு நடந்த தரமான சம்பவம்..

யாழ்.பிறவுண் வீதியில் உள்ள ஆலய கேணியில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததுடன், மாவா பாக்கும் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டதன் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். 

நேற்று நண்பகல் யாழ்.பிறவுண் வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கேணியடியில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மாணவர் ஒருவர் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்தனர். ஏனைய மூவரும் மதுபானம் அருந்தியவாறு இருந்தனர்.

நால்வரை கைது செய்து மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு வருகை தந்ததாகவும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மதுபானம் அருந்தியதாகவும் மாணவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

அவர்கள் க.பொ.த சாதாரணதரத்தை முடித்து தற்போது உயர்தரத்தில் கல்வி பயிலும் 17, 18 வயதுடையவர்கள் என விசாரணையில் கண்டற்றியப்பட்டது. மாணவர்களின் பெற்றோரை அழைத்து மூத்த பொலிஸ் அத்தியட்சகர், 

பிள்ளைகள் தொடர்பில் கண்காணிப்பு இல்லையா என எச்சரித்தார். பாடசாலையில் பயிலும் மாணவர்களை நீதிமன்றில் முற்படுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதனால் ஏற்படும் பாதகநிலை தொடர்பில் எடுத்துரைத்த மூத்த பொலிஸ் அத்தியட்சகர் 

எச்சரித்து பெற்றோரிடம் மாணவர்களை ஒப்படைத்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு