நாட்டில் சில பகுதிகளில் அதி உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரடகனம் செய்யப்பட்டு ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு!

ஆசிரியர் - Editor I
நாட்டில் சில பகுதிகளில் அதி உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரடகனம் செய்யப்பட்டு ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு!

கொழும்பில் சில பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், உயர் நீதிமன்றம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படைத் தலைமையகம், 

பொலிஸ் தலைமையகம், அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகம், கொம்பனி தெரு விமானப்படை தலைமையகம், மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை

மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் இல்லங்கள் இவ்வாறு அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு