நிறைபோதையில் பாடசாலை வளாகத்தில் தள்ளாடிய உப அதிபர்! அதிபருடன் முறுகிய பெற்றோர், பிரபல பாடசாலை ஒன்றில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நிறைபோதையில் பாடசாலை வளாகத்தில் தள்ளாடிய உப அதிபர்! அதிபருடன் முறுகிய பெற்றோர், பிரபல பாடசாலை ஒன்றில் சம்பவம்..

பிரபல பாடசாலை ஒன்றில் பணியாற்றும் உப அதிபர் மதுபோதையில் பாடசாலைக்கு வந்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 

பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர் தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். 

எனினும் திடீரென அவர் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக உந்துருளியில் ஏறியுள்ளார். 

ஆனால் குறித்த உதவி ஆசிரியரால் உந்துருளியை இயக்க முடியாமையினாலும், தனது உடல் கட்டுப்பாட்டினை இழந்தமையினாலும் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்கும் மாணவர்கள் கீழே விழுந்த ஆசிரியரை தூக்குவதற்கு முயற்சித்த வேளையிலேயே அவர் மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் பாடசாலையில் பெற்றோர்களுக்காக மாதாந்த கூட்டமும் நடைபெறவிருந்தமையினால் பெற்றோர்களும் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உப அதிபரின் செயலை கண்டித்து பெற்றோர்கள் அதிபருடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு