இன்று தொடக்கம் நாடு முழுவதும் மீண்டும் 2 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்று தொடக்கம் நாடு முழுவதும் மீண்டும் 2 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

நாடு முழுவதும் நாளை 23ம் திகதி தொடக்கம் 25ம் திகதிவரை 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் தினசரி மின்வெட்டு அமுலாகும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது. 

பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை இயங்காமை, வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்தமை ஆகியவை இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு