மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபகரமாக உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபகரமாக உயிரிழப்பு..!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருகோணமலை - ஆயிலியடி பகுதியில் நேற்று காலை இடம்பெற்றிருக்கின்றது. 

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் குறித்த பெண் வீழ்ந்து உயிரிழந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் சிராஜ் நகர் - 97ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான ஆர்.பௌவுசியா (வயது 44) என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு