மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

ஆசிரியர் - Editor I
மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நிலையில் தேவையான நிலக்கரியும் கிடைத்தால் டிசம்பர் மாதம்வரை மின்வெட்டு தேவையே இருக்காது. என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்துள்ளது. 

இது குறித்து நேற்று உடகங்களை சந்தித்து கருத்து தொிவித்த ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னக்க, தற்போது மின்சாரத் தேவை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த வாரம் தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இடம்பெறும் என்று அறிவித்திருந்த போதிலும் அந்த ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படவில்லை. 

3ம் திகதியில் இருந்து இன்று வரை மின்வெட்டு இல்லை. அதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. எனவே, மின்வெட்டுக்கு அவசியம் ஏற்படவில்லை. 

5ம் திகதி, வழங்கல் அதிகரித்துள்ளது. தேவையான அளவை விட அதிகளவில் உற்பத்தி செய்யும் திறன் எங்களிடம் தற்போது உள்ளது. 

எனவே, இந்த நிலக்கரி பிரச்சினை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு வரவில்லை என்றால் ஒரு மணித்தியால மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது. 

தேவையான அளவு தண்ணீர் இருந்தால், நிலக்கரி இருந்தால், வரும் டிசம்பர் மாதம் வரை. மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது” என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு