‘உலகக் கிண்ணத்தில் மலிங்க பங்குபெறமாட்டார்’

ஆசிரியர் - Admin
‘உலகக் கிண்ணத்தில் மலிங்க பங்குபெறமாட்டார்’

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மாலிங்க குறித்து எதிர்வரும் காலங்களில் நம்பிக்கை வைப்பது கடினம் என்பதாலேயே தேர்வுக் குழு அவரை நிராகரித்துள்ளதாகவும், ஆதலால் மலிங்கவின் எதிர்காலம் குறித்து கூறுவது கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு