மரண அறிவித்தல்: அமரர் கணகசபாபதி கெளரிதரன்

ஆசிரியர் - Admin
மரண அறிவித்தல்: அமரர் கணகசபாபதி கெளரிதரன்

யாழ். ஏழாலை மேற்கு சுண்ணாகத்தை பிறப்பிடமாகவும் அச்சுவேலி இடைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கணகசபாபதி கெளரிதரன் 21.05.2018 அன்று காலமானார்.

அன்னார் கணகசபாபதி ஜெயகெளரி தேவி தம்பதிகளின் மகனும் நடராசா கமலாதேவி தம்பதிகளின் மருமகனும், சசிகலாவின் பாசமிகு கணவரும், டக்சாயினி, திருசிகன், தனுசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் கெளதா, கெளசலா, ஜெயபிரதா, கெளரீஸ்வரன், தனஞ்சயன், ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 24.05.2018ம் திகதி இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைகளுக்காக சாமிதிடல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்- குடும்பத்தினர்

அச்சுவேலி இடைக்காடு..

நண்பா! உலகிற்கு நீ 
விடைகொடுத்து விட்டாய்...
எம் உள்ளத்தை விட்டு
என்றும் விடை கொடுக்க
மாட்டோம் உனக்கு...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு