நீதிமன்ற சான்றுப் பொருட்கள் காப்பகத்திலிருந்த கஞ்சா, கசிப்பு போன்ற சான்றுப் பொருட்கள் சில திருட்டு! பொலிஸ் உத்தியோகஸ்த்தர், காவலாளி கைது..

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற சான்றுப் பொருட்கள் காப்பகத்திலிருந்த கஞ்சா, கசிப்பு போன்ற சான்றுப் பொருட்கள் சில திருட்டு! பொலிஸ் உத்தியோகஸ்த்தர், காவலாளி கைது..

மன்னார் நீதிமன்ற சான்றுப் பொருட்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்ற கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மன்னார் நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஆகிய இருவரும் திருடி உள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று(18) காலை விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் காவலாளி தங்குமிட பகுதியை சோதனையிட்டுள்ளனர். இதன்போது திருடப்பட்ட சான்றுப் பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) ஆகியவற்றை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு