மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர..

ஆசிரியர் - Editor I
மண்ணெண்ணெய்க்காக காத்திருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர..

நாடு முழுவதும் 19ம் திகதி தொடக்கம் மண்ணெண்ணெய் விநியோகம் ஆரம்பமாகும். என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். 

இன்று (10) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மண்ணெண்ணெய் விலையை திருத்துவது குறித்தும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இம்மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இரண்டாவது கப்பலும் வரும் 29 ம் திகதி வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், எதிர்வரும் 15 ஆம் தேதி முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை இயக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய் தயாரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வரும் 19 ஆம் திகதி முதல் தொடர்ந்து மண்ணெண்ணெய் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு