முடிவுக்கு வந்துள்ள இழுபறி! நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன் - செந்தில்நந்தனன் ஆகியோரை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் கையெழுத்திட பணிப்பு...

ஆசிரியர் - Editor I
முடிவுக்கு வந்துள்ள இழுபறி! நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன் - செந்தில்நந்தனன் ஆகியோரை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் கையெழுத்திட பணிப்பு...

வடமாகாணத்தில் கடமையாற்றிய நிர்வாக சேவை சிறப்பு தர அதிகாரிகளான ஆ.இளங்கோவன் மற்றும் பா.செந்தில்நந்தனன் ஆகியோரை  பொது நிர்வாக அமைச்சில் உடனடியாக கையெழுத்திடுமாறு  குறித்த அமைச்சின் செயலாளர் வடமாகாண பிரதம  செயலாளருக்கு எழுத்து மூலமாக   கடிதம் அனுப்பியுள்ளார்.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக  கடமையாற்றிய இளங்கோவன் மற்றும் வடமாகாண  பேரவை செயலகத்தில் கடமையாற்றிய செந்தில் நந்தனன் ஆகியோரையே இவ்வாறு கையெழுத்தடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் குறித்த இரு நிர்வாக  அதிகாரிகளும் வடமாகாண நிர்வாகத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு