பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

அரச பாடசாலை பரீட்சைகள் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு நவம்பர் இறுதி வரை விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர 2022 பரீட்சைகளைக் கருத்தில் கொண்டே தொடர்ச்சியான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது.

தரம் 3 மாணவர்களுக்கான பாடசாலைகளை நடத்துவதற்கான தேவைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்றுவரும் அதேவேளை, தினசரி கல்வி நடவடிக்கைகளில் இருந்து தரம் 01 மற்றும் 02 ஐ தவிர்ப்பது குறித்தும் கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு