யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதத்திலிருந்து பாதுகாப்பு ஊழியரை உதைந்து விழுத்தி கொலை செய்த காடையர்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதத்திலிருந்து பாதுகாப்பு ஊழியரை உதைந்து விழுத்தி கொலை செய்த காடையர்கள்..!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதத்திலிருந்து பாதுகாப்பு ஊழியரை தள்ளி விழுத்தி கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகைரதத்தில் சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தமையால் பயணிகள் அசௌகரியமடைந்தனர். 

இதனையடுத்து குறித்த விடயத்தை புகைரத பாதுகாப்பு ஊழியருக்கு தொியப்படுத்திய நிலையில் அவர் அதனை கண்டித்திருக்கின்றார். 

இதனால் மதுபோதையில் இருந்த காடையர்கள் பாதுகாப்பு ஊழியரை புகைரதத்திலிருந்து உதைத்து விழுத்தியுள்ளனர். 

புகைரதத்திலிருந்து வெளியே விழுந்த பாதுகாப்பு ஊழியரான 53 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் வதுராவ புகைரத நிலையத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதுடன், 

நொச்சியாகம மற்றும் அனுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இரு காடையர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் இராணுவ சிப்பாய்கள் என தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு