19ம் திகதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பார்க்கலாம் - எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
19ம் திகதி வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பார்க்கலாம் - எம்.ஏ.சுமந்திரன்..

ஜனாதிபதி தொிவுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவு நிலைப்பாட்டினை அறிவிக்கும் என கட்சியின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

பதில் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் அவருக்குக் கீழ் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை இரு நியமனங்களும் செல்லுபடியாகும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு