ஊடகவியலாளர்கள் 11 பேர் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டம்..!

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளர்கள் 11 பேர் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டம்..!

கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரி யாழ்.பல்கலைகழக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

இன்று நண்பர்கள் 12 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் வாயில் கறுப்புத் துணிகளை கட்டியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

அடக்குமுறை வேண்டாம், அரசே பதில் கூறு, ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு