பிரதமர் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தவேண்டும்..! நிலைமை மோசமாகவுள்ளது, டக்ளஸ் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
பிரதமர் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தவேண்டும்..! நிலைமை மோசமாகவுள்ளது, டக்ளஸ் எச்சரிக்கை..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தற்போதுள்ள நிலைமைகள் மோசமடைவதற்கு முன்னர் நடவடிக்கையில் இறங்கவேண்டும். என அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறாத நிலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றமை தொடர்பாக, 

இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 

“ஏற்கனவே எரிபொருளுக்காக மக்கள் நாள் கணக்கில் வீதியில் நிற்கின்ற நிலையில், கிடைக்கின்ற எரிபொருளையும் தாமதப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் அமையுமாயின், 

மின்வெட்டு உட்பட்ட பல மோசமான விளைவுகளை நாடு எதிர்கொள்ள நேரிடும்.தற்போதைய நிலையில் நாடடின் நலன் கருதி அமைச்சரவையின் ஒத்துழைப்புடன், பிரதமர் விடயங்களை கையாள வேண்டும்” 

என்று வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு