அதிகாலை முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓசி...!

ஆசிரியர் - Editor I
அதிகாலை முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓசி...!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் - மற்றும் ஐ.ஓ.சி ஆகியன இன்று அதிகால 2 மணி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளன. 

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 470 ரூபாயாகும்.

அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை லீற்றர் ஒன்றின் விலை 550 ரூபாயாகும்.

இதேவேளை சிலோன் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 460 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாயினால் 520 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு