3 குழந்தைகளுக்கு தாயான ஹிருணிகா மீதான கீழ்தரமான விமர்சனங்கள், கேலிகளை நிறுத்துங்கள்..! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்..

ஆசிரியர் - Editor I
3 குழந்தைகளுக்கு தாயான ஹிருணிகா மீதான கீழ்தரமான விமர்சனங்கள், கேலிகளை நிறுத்துங்கள்..! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்..

3 குழுந்தைகளுக்கு தாயான ஹிருணிகா மீதான அநாகரீகமான விமர்சனங்கள் மற்றும் கேலிகளை நிறுத்துங்கள். என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார். 

இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஒழுக்கமான சமூகத்தில் தாய்மையை கொச்சைப்படுத்தப்படக் கூடாது . எல்லாவற்றிற்கும் முன்பு தாய்மை என்பது மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வீட்டிற்கு முன்னால் ஹிருணிக்கா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது மார்பங்கள் வெளியில் தென்பட்டமை தொடர்பில் எடுக்கப்பட்ட அநாகரீகமான புகைப்படங்கள் 

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். 

ஹிருணிக்கா எனது வீட்டிற்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தமை அரசியல் காரணங்களுக்காகவே. 

அதை நாகரீகமாக , கருத்தினால் அணுகவேண்டும். பெண்மையை, தாய்மையை கொச்சைப்படுத்தும் வகையில் எவரும் அநாகரீகமாக நடந்துகொள்ளக் கூடாது.

என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு