அண்ணனும், தம்பியும் துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மீது வைத்தியசாலைக்குள் புகுந்து கத்திக்குத்து...!

ஆசிரியர் - Editor I
அண்ணனும், தம்பியும் துரத்தி.. துரத்தி.. வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மீது வைத்தியசாலைக்குள் புகுந்து கத்திக்குத்து...!

வைத்தியசாலைக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் நொச்சிக்குளம் பகுதியில் இரு சகோதரர்கள் வாள்வெட்டு தாக்குதலில் பலியாகிய நிலையில் நள்ளிரவில் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கத்திகுத்துக்கு இழக்காகியுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு