வரதட்சனை கொடுமையால் மனைவி தற்கொலை!! -கணவர்தான் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு-

ஆசிரியர் - Editor II
வரதட்சனை கொடுமையால் மனைவி தற்கொலை!! -கணவர்தான் குற்றவாளி என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு-

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த மருத்துவ மாணவி விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர்தான் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த வருடம் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத் திருமணத்திற்கு வரதட்சனையாக ஒரு ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வழங்கப்பட்டது. 

இருப்பினும் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் விஸ்மயாவை மிக மோசமாக துன்புறுத்தினார். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர் கடந்த ஜூன் மாதம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட கிரண் குமார், வரதட்சணை கொடுமையால் மரணம், கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தத்தல், தற்கொலைக்கு தூண்டுதல், மிரட்டல் விடுவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின்போது 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் கைபேசி உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுகொள்ளப்பட்டது. 

மேலும் இந்த வழக்கு குறித்து பொலிஸார் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பொலிஸாரின் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் ஹவிஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என உறுதியாகிறது. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது என்று உத்தரவிடப்பட்டது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு