இதுதான் பிரம்மாண்டம்!! -கே.ஜி.எப் பார்த்து பிரமித்த ஷங்கர்-

ஆசிரியர் - Editor II
இதுதான் பிரம்மாண்டம்!! -கே.ஜி.எப் பார்த்து பிரமித்த ஷங்கர்-

கே.ஜி.எப் என்ற மிகப் பிரம்மாண்ட படைப்பை கொடுத்ததற்காக பிரசாந்த் நீல்க்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக நவீன முறையில் கதை, திரைக்கதை, படத்தொகுப்பை கொடுத்து மகிழ்வித்துள்ளதாக கே.ஜி.எப் 2 படக்குழுவை ஷங்கர் பாராட்டியுள்ளார். 

படத்தை பார்த்துவிட்டு ருவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர்:- அதிரடி காட்சிகளில் வரும் வசனங்கள் ரசிக்க வைத்துள்ளதாகவும், யாஷ் மாஸாக நடித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

'பெரியப்பா' வசனம் வரும் காட்சியை குறிப்பிட்டு கூறியுள்ள ஷங்கர், பிரம்மாண்ட படைப்பை கொடுத்ததற்காக பிரசாந்த் நீல்க்கு நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு சகோதரர்களையும் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு