பாலியல் தொல்லை கொடுத்தவர் வெட்டிக் கொலை!! -பிரமுகரின் தலையை 3 நாளாக தேடும் பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
பாலியல் தொல்லை கொடுத்தவர் வெட்டிக் கொலை!! -பிரமுகரின் தலையை 3 நாளாக தேடும் பொலிஸ்-

இந்தியாவில் பாலியல் தொல்லையால் கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகரின் தலையை அடையாறில் 3 நாளாக தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 65 வயதான  சக்கரபாணி என்பவர் திருவொற்றியூர் தி.மு.க பிரதிநிதியான உள்ளார். அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த 10 ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. 

இவ்விடயம் தொடர்பில் அவரின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதன்படி பொலிஸ் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா மற்றும் கைபேசி சிக்னல் மூலம் தேடினர்.

இதன் போது கைபேசியின் சிக்னலை வைத்து ராயபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்று பொலிஸார் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் குளியல் அறையில் இருந்த சாக்குமூட்டையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் உடல் காணப்பட்டது.

விசாரணையில் குறித்த வீட்டின் உரிமையாளரான 40 வயது பெண் தனது தம்பியுடன் இணைந்து சக்கரபாணியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது. இதன்படி இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். 

இவர்களுக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதி தலைமறைவான நிலையில் அவரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. வாக்குமூலத்தில் அவர்கள் தெரிவித்ததாவது:-

இதன்படி நான், 3 வருடங்களுக்கு முன் சக்கரபாணி வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன். எனது கணவர் அஸ்லாம் உஜைனி, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வருவார். 

சக்கரபாணி எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உதவினார். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சக்கரபாணி, என் கணவர் இல்லாத நேரத்தில் கடனை கேட்டு வருவது போல வீட்டுக்கு வருவார். அப்போது என்னுடன் உல்லாசமாக இருந்தார். 

இதுபோல் தொடர்ந்து அவர், எனது வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையில் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ சாரதியுடன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம்.

இந்தநிலையில் கடந்த 10 ஆம் திகதி இரவு சக்கரபாணி குடிபோதையில் எனது வீட்டுக்கு வந்தார். நான், எனது 2 மகள்களும் வீட்டில் இருக்கிறார்கள். எனவே வீட்டுக்குள் வரவேண்டாம் என்றேன். ஆனால் அதையும் மீறி வீட்டுக்குள் வந்த அவர், வலுக்கட்டாயமாக என்னை கட்டிப்பிடித்து உறவுக்கு வரும்படி அழைத்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த நான், அவரிடம் சண்டை போட்டேன். அப்போது சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்து எனது தம்பி வாசிம் பாஷா அங்கு வந்தான். சக்கரபாணியை இனிமேலும் உயிருடன் விட்டு வைக்க கூடாது என்று கருதிய நாங்கள் இருவரும் சேர்ந்து சக்கரபாணியை கீழே தள்ளி, அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிக்கொலை செய்தோம்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலையை துண்டித்து தலையையும், குடலையும் தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டினோம். பின்னர் அதனை டில்லி பாபு, வாசிம்பாஷா இருவரும் ஆட்டோவில் கொண்டு சென்று, குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பைபர் படகுகள் நிற்கும் பகுதியில் போட்டு விட்டனர். தலையை அடையாறு மலர் வைத்தியசாலை அருகே கல்லைகட்டி ஆற்றில் வீசிவிட்டார் என்றானர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு