சீனா விமானம் விபத்துக்குள்ளானது எவ்வாறு? -கறுப்புப் பெட்டி கண்டெடுப்பு-

ஆசிரியர் - Editor II
சீனா விமானம் விபத்துக்குள்ளானது எவ்வாறு? -கறுப்புப் பெட்டி கண்டெடுப்பு-

சீனா நாட்டின் குவாங்சி மாகாணத்தில் இருந்து 132 பேருடன் பயணித்த நிலையில் மலையில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு தேடுதல் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விமானத்தில் பயணித்த எவரும் இதுவரை உயிருடன் மீட்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி இன்றைய தினம் தேடுதல் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விமானத்தில் பயணித்த 132 பேரில் ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லையென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு